tamilnadu

img

பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய லாரி

கடலூர், செப்.10- கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் பிரேக் பிடிக்காத டிப்பர் லாரி  ஒன்று, கார் மீது மோதி, சில மீட்டர்  தூரத்திற்கு அந்த காரை இழுத்துச் சென்று பதை பதைப்பூட்டும் சிசிடிவி காட்சி கள் வெளியாகியுள்ளன. பர பரப்பான சாலையில் நடந்த இந்த  விபத்து, பொதுமக்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் சென்னை - கும்பகோணம், பண்ருட்டி - மடப்பட்டை இணைக்கும் சாலையின் நான்கு முனை சந்திப்பில் திங்களன்று இரவு இந்த விபத்து  நிகழ்ந்துள்ளது. சென்னையி லிருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று,  தறிகெட்டு ஓடி சாலை ஓரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியது. இதில், ஜெயக்குமார், பர மானந்தம், சிவக்குமார், மற்றும் ராஜூவ்காந்தி ஆகிய நான்கு பேர்  படுகாயமடைந்தனர். தட்டாம் பாளையத்தைச் சேர்ந்த ரங்க நாதன் மீது மோதிய லாரி, அடுத்த  விநாடியில் எதிர் திசையில் இடது புறமாக வந்து கொண்டிருந்த கார்  மீது நேருக்கு நேர் மோதியது. இதில், ரங்கநாதனின் உடல், காருக்கு அடியில் சிக்கிக் கொண்  டது. அவரது உடலுடன் காரை தள்ளிக் கொண்டு சென்ற டிப்பர் லாரியால் பதற்றம் நிலவியது. காருக்குள் இருந்தவர்கள் அல றினர். நான்குமுனைச் சந்திப்பில் போக்குவரத்துக் காவல் பணி யில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர்  டிப்பர் லாரியைத் தடுக்க முற்பட்டார். ஆனால் டிப்பர் லாரி நிற்காமல் காரை தள்ளியபடி சென்றது. சில மீட்டர் தூரம் கடந்து அந்த லாரி நின்றது. பரபரப்பான சாலையில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சி கள் வெளியாகியுள்ளன.

பிரேக் பிடிக்காத கார ணத்தால் தான், இந்த விபத்து ஏற்பட்டது என்ற அதிர்ச்சித் தக வல் ஓட்டுநரைப் பிடித்த பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. ஓட்டு நர் ராமச்சந்திரனை கைது செய்த  காவல்துறையினர், காரில்  இருந்த இருவரை மீட்டு பண் ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓட்டுநரிடம் நடத்திய விசா ரணையில், பிரேக் செயல் இழந்து விட்டதை அறிந்து அதிர்ச்சி யில் எப்படியாவது லாரியை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்ததாகவும், எதிரே பேருந்து வந்ததால் விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்று சாலைத் தடுப்பில் மோதி நிறுத்த முயன்றதாகவும், அப்போது தான் பாதசாரிகள் மீது மோத நேரிட்டதாகவும், கார் குறுக்கே வந்து சிக்கிக் கொண்டதாகவும் ஓட்டுநர் ராமச்சந்திரன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.